கோலாலம்பூர்:
டூத்தா – உலு கிள்ளான் விரைவுச்சாலையில் (Duke) ஒரு லோரி ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
மாலை 4:16 மணிக்கு தீ வித்து பற்றிய அழைப்பினை பெற்ற தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று (ஏப்ரல் 6) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மணல் ஏற்றிச் சென்ற லோரி முற்றிலும் எரிந்து நாசமானது என்றும், இவ்விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.