தந்தையை காப்பாற்ற முயன்ற தனயன் மரணம்

கோலாலம்பூர்:

ற்றில் வழுக்கி விழுந்த தந்தையைக் காப்பற்ற ஆற்றில் குதித்த 21 வயது மகன் மூழ்கி மாண்டார்.

இச்சம்பவம் கோலாலம்பூர், ஜாலான் கிள்ளான் லாமாவில் அவான்ட் கோர்ட் கொண்டோமினியம் அருகில் நிகழ்ந்தது.

சம்பவம் பற்றி தகவல் பெற்ற பின்னர், புக்கிட் ஜாலில், ஜாலான் ஹங் துவா தீயணைப்பு, மீட்பு நிலையங்களில் இருந்து 10 அதிகாரிகள் – வீரரகள் அங்கு விரைந்தனர் என்று, நடவடிக்கை கமாண்டர் முஹம்மட் இக்பால் ஸக்காரியா தெரிவித்தார்.

மேலும் அந்த இந்திய இளைஞர் பின்னர் பிணமாக மீட்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here