கோலாலம்பூர்:
மலேசியாவில் சீன நிறுவனங்கள் முதலீட்டை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புவதாக கூறிய மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம், இதன் மூலம் நாட்டில் உள்ள மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.
இன்று நடைபெற்ற சந்திப்பில் மாட்சிமை தங்கிய பேரரசர், மலேஐயாவிற்கான சீன தூதுவர் கியூயாங் யூஜிங்கை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார். இந்த சந்திப்பில் எப்ஏடபள்யூ ஹோங்கி குளொபல் நிறுவனத்தின் தலைவர் வாங் லிங்யூ, வர்த்தகப் பிரமுகர்களான டான்ஸ்ரீ லிம் கோக் தாய், டத்தோ லிம் சீ வா ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.