வெற்றியை உறுதி செய்வோம் மென்செஸ்டர் நம்பிக்கை

இந்தத் தவணை பிரிமியர் லீக் போட்டி, எப்ஏ கிண்ணப் போட்டி, சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டி என விளையாடி வரும் 3 முதன்மை போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் சாதனை புரிய தாம் இலக்கு கொண்டிருப்பதாக மென்செஸ்டர் சிட்டி ஆட்டக்காரர் கோர்டியாலா தெரிவித்துள்ளார்.

மென்செஸ்டர் சிட்டி இம்முறை போட்டியில் கிண்ணத்தை வெல்வதற்கு லிவர்புல்- அர்செனல் ஆகிய  அணிகளிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்கி வருகின்றது. அவ்வணி இத்தவணை பிரிமியர் லீக் போட்டியில் 70 புள்ளிகளை கொண்டுள்ளது.

அதேசமயம் எப்ஏ கிண்ணப் போட்டியிலும் அரையிறுதிச் சுற்றில் நுழைந்திருக்கின்து. இந்த சுற்றில்  மென்செஸ்டர் சிட்டி செல்சி அணியை  எதிர்கொண்டு விளையாடவுள்ளது.

மேலும் சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் காலிறுதிச் சுற்றில் இடம்பெற்றுள்ள அவ்வணி இரு தினங்களுக்கு முன்பு முதல் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியுடன் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இந்நிலையில் இந்த 3 போட்டிகளிலும் குறிப்பாக எப்ஏ கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கட்டாயம் வெற்றியை பதிவு செய்து இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்து கிண்ணத்தை கைப்பற்ற அணியினர் அனைத்தையும் வழங்குவர்.

அதேபோல் பிரிமியர் லீக் போட்டியிலும் இன்னும் 7 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த 7 ஆட்டங்களிலும் வெற்றியை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்பது எங்களின் உறுதியான இலக்கு என்றும் கோர்டியாலா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here