புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம், சுக்கிந்தா பிளாக்கில் அமைந்துள்ள காளியபானி சாருப்பியா பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் வாசுதேவ் தேக்கிரி. இவர் கடந்த 17ம் தேதி மாணவர்கள் சிலர் செய்த தவறுக்காக தண்டனை கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
வழக்கமாக பிரம்பால் அடிப்பார், இல்லையென்றால் தோப்புக்காரணம் போட சொல்வர். ஆனால் இந்த முறை அவர் கையில் எடுத்த புதுவித ஆயுதம் மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது. அதாவது, பீஞ்சிவாட்டி எனும் ஒரு வகை விஷத்தன்மை கொண்ட தேள் கொடுக்கு செடி கிளைகளை உடைத்து மாணவர்களின் பேண்ட்டுக்குள் கட்டாயப்படுத்தி திணித்துள்ளார்.









