கோத்தா மாருடு:
இங்குள்ள ஜாலான் கம்போங் கானாவில், கட்டுப்பாட்டை இழந்து நான்கு சக்கர வாகனம் தலைகீழாக கவிழ்ந்ததில், இரண்டு பெண் உடன்பிறப்புகள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் நடைபெற்ற் இச்சம்பவத்தில், பலத்த காயமடைந்த சோமினே எங்காங் (17) மற்றும் டோயுத் நானு (58) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த 65, 85 மற்றும் 27 வயதுடைய ஓட்டுநர் உட்பட மூவர் மேலதிக சிகிச்சைக்காக கோத்தா மாருடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று, கோத்த மாருடு மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஜைரோல்நிசல் இஷாக் கூறினார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் உறவினர் என்று அறியமுடிகிறது என்று அவர் கூறினார்.