பல நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவர் சடலமாக மீட்பு

கங்சார்: பல நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவர், சனிக்கிழமை (ஏப்ரல் 20) காலை  சுங்கை கம்போங் தித்தி டோக் பண்டார் அருகே உள்ள முட்புதரில்,  சட்டையின்றி தலை குப்புற நிலையில் இறந்து கிடந்தார். சனிக்கிழமை  அருகாமையில் இருந்த ஒருவரால், சே மான் சே பை (68) என அடையாளம் காணப்பட்டபோது முதியவர் உயிரற்ற நிலையில் இருந்ததாக பெர்லிஸ் காவல்துறைத் தலைவர்  டத்தோ முஹம்மது அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் இறந்துவிட்டதை நாங்கள் கண்டறிந்தோம்… மேலும் அவரது மகனால்  அவர் அடையாளம் காணப்பட்டார். விசாரித்ததில், அவரது தந்தை கடந்த மூன்று முதல் நான்கு நாட்களாக கம்போங் மேடான் உதான் அஜியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து காணவில்லை என்று கூறினார் என்று அவர் கூறினார்.  காணாமல் போன முதியவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டது. அந்த முதியவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததோடு துவாங்கு பௌசியா மருத்துவமனையில் (HTF) மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்தது.

பெர்லிஸ் படைத் தலைமையகத்தின் தடயவியல் குழு, இறந்தவரின் உடலைப் பரிசோதித்ததாகவும், அதில் எந்தவித குற்றவியல் கூறும் இல்லை என்றும், தற்போதைக்கு இந்த வழக்கை திடீர் மரணமாக வகைப்படுத்தியதாகவும் அவர் கூறினார். மேலும் விசாரணைக்காக முதியவரின் உடல் கங்சாரில் உள்ள துவாங்கு பௌசியா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here