சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் ஆய்வாளர் கைது

ஜோகூர் பாரு: வயது குறைந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொந்தியான போலீஸ் தலைமையகத்தில் பணிபுரிபவர் என்றும், மாலை 6 மணியளவில் தாமான் ஜோகூர் ஜெயாவில் 16 வயது இளைஞன் மீது இந்தச் செயலைச் செய்துள்ளதாகவும் ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

29 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக செவ்வாய்கிழமை (ஏப்ரல் 22) ஶ்ரீ ஆலம் பகுதியில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் சிம்கார்டையும் கைப்பற்றியுள்ளோம் என்று புதன்கிழமை (ஏப்ரல் 24) அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் ஒரு குழந்தை மீதான உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும் என்று குமார் கூறினார். சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக புதன்கிழமை (ஏப்ரல் 23) முதல் ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார். ஊகங்களால் விசாரணை பாதிக்கும் என்பதால், ஊகங்கள் வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here