பினாங்கு டத்தோ கெராமாட் காவல் நிலையத்தில் போலீஸ்காரரின் கைத்துப்பாக்கியை பறிக்க முயற்சித்ததாக ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 35 வயதான பார்க்கிங் உதவியாளரான சுப்ரமணியம் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை டத்தோ கெரமாட் காவல் நிலையத்தில் “குடிபோதையில் அத்துமீறி நுழைந்து” அதிகாலை 4.45 மணியளவில் ஒரு காவலரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.
மாஜிஸ்திரேட் நத்ரதுல் நைம் சைடி முன் வாசிக்கப்பட்ட பிறகு, குற்றவியல் சட்டத்தின் 186ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு விசாரணைக்கு சுப்பிரமணியம் கோரினார். நத்ரதுல் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 5,000 ரிங்கிட் ஜாமீன் நிர்ணயம் செய்து, வழக்கை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். சுப்ரமணியத்தின் வழக்கறிஞர் ரஞ்சித் சிங் சந்து, தனது கட்சிக்காரர் பார்க்கிங் உதவியாளர் மட்டுமே எனக் கூறி, ஜாமீன் தொகையை குறைக்குமாறு மேல்முறையீடு செய்தார்.








