கம்போடியா தேசத்துடனான கூட்டு ராணுவப் பயிற்சியில், தானியங்கி துப்பாக்கியால் சுடும் ரோபோ நாயை அறிமுகம் செய்து உலக நாடுகளை சீனா அதிர வைத்துள்ளது.

ரிமோட் மூலம் இயக்கப்படும் ரோபோ நாய் நடப்பது, துள்ளுவது, படுப்பது மற்றும் பின்னோக்கி நகர்வது, துப்பாக்கியால் பாய்ந்து சுடுவது போன்றவற்றை மிரட்டலாக சாதிக்கின்றன. இந்த ரோபோ நாய் 15 கிலோகிராம் எடையுள்ளதாகவும், நான்கு பரிமாண வைட் ஆங்கிள் உணர்தல் அமைப்புடன் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சீனா-கம்போடியா கோல்டன் டிராகன் 2024 கூட்டு ராணுவப் பயிற்சியில் 1,315 கம்போடிய ராணுவ வீரர்கள் மற்றும் 760 சீன வீரர்கள் பங்கேற்கின்றனர். 2016 ஆம் ஆண்டு முதல் கோல்டன் டிராகன் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவுடனான அங்கோர் சென்டினல் எனப்படும் இதேபோன்ற பயிற்சிகளை கம்போடியா ரத்து செய்ததை அடுத்து, சீனாவுடனான கோல்டன் டிராகன் கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கப்பட்டது.





















