பட்டர்வொர்த்: இன்று அதிகாலை 2 மணியளவில் சுங்கை லோகனில் உள்ள ஜாலான் பெர்மாதாங் பாருவில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர். பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அகமதுவைத் தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிசெய்து, தண்டனைச் சட்டம் 307 மற்றும் ஆயுதச் சட்டம் 1960ன் பிரிவு 8ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார். ஜாலான் போகோக் சேனா சந்திப்பில் ஜாலான் பெர்மாதாங் பாருவை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் மைவி கார் ஓட்டிச் செல்வதை மாநில போலீஸ் தலைமையகம் மற்றும் செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழு கண்டறிந்தது.
போலீசார் ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். ஆனால் சந்தேக நபர் நிற்காததோடு போலீசாரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறியப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டினை தொடர்ந்து போலீசார் பதில் தாக்குதல் நடத்திய போது இரண்டு உள்ளூர் சந்தேக நபர்கள் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர் மற்றும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக பினாங்கு காவல்துறையால் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும்.








