நீட் தேர்வை மாணவர்கள் நம்பவில்லை. இது பணக்காரர்களுக்கானது, தகுதியானவர்களுக்கான தேர்வு இல்லை என மாணவர்கள் கருதுகிறார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


நீட் தேர்வை ஏழைகளுக்காக கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். தற்போது பணம் படைத்தவர்களுக்கு என்று ஆகிவிட்டது. நீட் தேர்வை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். நீட் குறித்து விவாதம் நடத்த கோரினால் அதனை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது. நீட் தேர்வு ஆரம்பித்து 7 ஆண்டுகள் தான் ஆகின்றது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளால் 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நீட் தேர்வு எனும் தொழிற்கல்வியை வியாபார கல்வியாக மாற்றிவிட்டார்கள். நீட் தேர்வின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. ஜனாதிபதி உரையில் கூட நீட் தேர்வு பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை” என்று ராகுல் காந்தி பேசினார்.