திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில் பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசப் பயணம் செய்வதற்கான இலவசப் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா. கர்ப்பிணியான இவர் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்தில் பயணம் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டு கத்தினார்.
தெலுங்கானா மாநிலத்தில் அரசுப் பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம் செய்ய அனுமதி அட்டை வழங்குவதற்கு ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அது நடப்புக்கு வந்துள்ளது.





















