தும்பாட்டிலுள்ள ஒரு வீட்டில் தீ சம்பவம்; தனியாக வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு

கோத்தா பாரு:

நேற்று (ஜூலை 11) இரவு 7.30 மணியளவில், தும்பாட், வகாஃப் பாரு, கம்போங் புக்கிட் என்ற இடத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட ஹலிமா அவாங், 85, என்ற மூதாட்டி வீட்டின் குளியலறையில் உடலின் பல பாகங்களில் தீக்காயங்களுடன் கிடந்தார் என்று, வகாஃப் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் நசா நஃபி கூறினார்.

சம்பவம் தொடர்பில் இரவு 8.04 மணிக்கு அழைப்பைப் பெற்றவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​தீ விபத்தில் குறித்த வீட்டின் 70 விழுக்காடு எரிந்து நாசமானது என்றும், இரவு 8.37 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது, ​​பாதிக்கப்பட்டவர் குளியலறையில் கிடந்ததைக் கண்டோம்,” என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேல் நடவடிக்கைக்காக சடலம் தும்பாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here