கொலம்பியாவுக்கு எதிரான கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியின் இரண்டாவது பாதியில் லியோனல் மெஸ்ஸி கணுக்காலில் காயம் அடைந்தார். அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் பெஞ்சில் கண்ணீருடன் இருப்பதைக் கண்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் இறுதியில் அர்ஜன்டினா அணி போட்டியை வென்று மெஸ்ஸியின் கையில் கோப்பையை வழங்கி அவரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தினார்கள்.
கொலம்பியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியின் 36வது நிமிடத்தில் கணுக்காலில் காயம் அடைந்தார் மெஸ்ஸி. ஆனால் அதன் பிறகும் ஒரு சில நிமிடங்கள் விளையாடிய மெஸ்ஸியால் வலி தாங்கமுடியவில்லை. எனவே போட்டியை விட்டு பாதியிலேயே கண்ணீருடன் வெளியேறினார் மெஸ்ஸி. 37 வயதான அவர் வெளியேறியபோது ஆட்டம் 0-0 என நேர்த்தியாக இருந்த நிலையில், அர்ஜென்டினா தனது ஆட்டத்தை உயர்த்தியது மற்றும் கூடுதல் நேரத்தில் லாட்டாரோ மார்டினெஸ் ஒரு கோல் அடிக்க 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜன்டினா அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் அர்ஜன்டினா அணி 16 ஆவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, மெஸ்ஸி தனது காயம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது, கோபா அமெரிக்கா முடிந்துவிட்டது, செய்திகள் மற்றும் வாழ்த்துக்களுக்காக அனைவருக்கும் முதலில் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன், கடவுளுக்கு நன்றி, விரைவில் நான் மீண்டும் களத்தில் இறங்குவேன் என்றார் மெஸ்ஸி.
மேலும் நாங்கள் ஒரு குழு மற்றும் ஒரு குடும்பம், ஒரு அற்புதமான குழு. எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, இந்த தேசிய அணிக்கு நிறைய நிகழ்காலம் மற்றும் நிறைய எதிர்காலம் உள்ளது என்றார் மெஸ்ஸி. இந்நிலையில் மெஸ்ஸிக்கு ஏற்பட்ட காயம் மிக விரைவில் சரியாகிவிடும் என்றும், விரைவில் அவர் களத்தில் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.







