காணாமல் போன 14 வயது இளைஞனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்

மூவார், பாகோவில் உள்ள தனது பாட்டியின் வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது முஹம்மது எஃப்சல்தானிஷ் முகமட் எஃபெண்டி நேற்று  முதல் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கிறது. 160 சென்டிமீட்டர் உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட, நேரான தலைமுடி மற்றும் நடுத்தர பழுப்பு நிறத்துடன் இருக்கும் இளைஞன், நேற்று காலை 7 மணிக்கு மேல்நிலைப் பள்ளி சீருடை – வெள்ளை சட்டை மற்றும் பச்சை நிற பேன்ட் அணிந்திருந்ததாக மாவட்ட போலீஸ் தலைமை உதவி கமிஷனர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.

முஹம்மது எஃப்சல்தானிஷ் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பி. செவென்டி பன்னீர் சில்வனை 011-1625 1909 என்ற எண்ணிலோ அல்லது மூவார் மாவட்ட காவல்துறையின் ஹாட்லைன் 06-9564800 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு ரைஸ் முக்லிஸ் கேட்டுக் கொண்டார்.

ஜாலான் கெராயோங், ரூமா ராக்யாட் 1 இல் தனது பாட்டியுடன் வசிக்கும் மாணவர் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு காணாமல் போனார். சிறுவன் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் தனது தாய் காலமானதாகவும் அவரின் தந்தை நெகிரி செம்பிலானில் உள்ள தம்பினில் வசிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here