ஆத்திரத்தில் காரை எட்டி உதைத்த ஆசாமி சாலையில் தடுமாறி விழுந்த சம்பவம்

கர்ம வினை வலிமை மிக்கது. ஆத்திரத்தில் ஒரு காரை எட்டி உதைத்த ஒரு மோட்டார் சைக்கிளோட்டி அந்த தாக்கத்தில் கீழே விழுந்தார்.

காரின் டேஷ்கேமில் பதிவான அக்காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

டொயோட்டா கார் ஒன்று நடு சாலையில் இருந்து வலது பக்க தடத்திற்கு மாறுவதற்கு சிக்னல் கொடுத்தது. ஆனால் மோட்டார் சைக்கிளோட்டியோ அதனை மிகப் பெரிய குற்றமாக நினைத்துக்கொண்டு ஆத்திரம் தலைக்கேறி பலம் கொண்டு அக்ககாரை எட்டி உதைத்தார்.

கர்ம வினை சும்மா இருக்குமா? மோட்டார் சைக்கிள் தடுமாற அந்த ஆள் பக்கத்தில் வந்துக்கொண்டிருந்த ஒரு கறுப்பு நிற காரின் பக்கவாட்டில் மோதி சாலையில் விழுந்தான்.

வலி, அவமானம் தான் மிஞ்சியது. ஆத்திரக்காரனுக்கு புத்தி இருக்காது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here