உணவு விஷமானதால் 51 மாரா கல்லூரி மாணவர்களுக்கு மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை

கோலாலம்பூர்:

லாக்காவில் உள்ள ஆயர் மோலெக், தியாங் துவா ஆகிய மாரா நிபுணத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மொத்தம் 51 மாணவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டிடியூட் கஃபேயில் உணவை உட்கொண்ட பிறகு, உணவு விஷமானதற்கான அறிகுறிகள் ஏற்பட்டதன் காரணமாக ஜாசின் மருத்துவமனை மற்றும் ஆயர் மோலெக் ஹெல்த் கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களில், 36 பெண்கள் மற்றும் 15 ஆண்களும் அடங்குவர் என்றும், அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை அனுபவித்ததாக மாநில கல்வி, உயர்கல்வி மற்றும் மத விவகாரக் குழுத் தலைவர் டத்தோ ரஹ்மத் மாரிமன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,நேற்று (ஆக. 16) மாலை 6.30 மணி முதல் 14 நாட்களுக்கு பல்வேறு உணவுப் பொருட்களை விற்கும் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள ஏழு கஃபேக்களை மூடுமாறு மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here