முன்னாள் உதவித்தலைவர் சி.சிவராஜை மீண்டும் கட்சியில் அமர்த்துவது குறித்து மஇகா அடுத்த வாரம் முடிவு செய்யும். கட்சியின் மத்திய செயற்குழு (CWC) செப்டம்பர் 5ஆம் தேதி கூடும். அங்கு இந்த விஷயம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நம்பதக்க வட்டாரம் தெரிவித்துள்ளது. கட்சியில் மீண்டும் இணைவதற்கான விண்ணப்பத்தை அவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனிடம் சமர்ப்பித்ததாக பெயர் வெளியிட விரும்பாத அந்த வட்டாரம் எஃப்எம்டியிடம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாரிசான் நேஷனல் உறுப்பு கட்சியில் இருந்து சிவராஜ் ராஜினாமா செய்தார். ஒரு செனட்டர் மற்றும் இந்திய சமூகத்தின் தலைவராக தனது பொறுப்புகளை எந்த இடையூறும் இல்லாமல், குறிப்பாக மஇகா தலைமையிலிருந்து நிறைவேற்ற விரும்புவதாக அவர் கூறினார். விக்னேஸ்வரனின் தலைமையில் பல சம்பவங்கள் இடம்பெற்று அங்கத்துவத்தை துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதே வேளை தி மலேசியன் இன்சைட் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, முன்னாள் கேமரன் ஹைலேண்ட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பல இனக் கட்சியில் சேர்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அவர் பெரிக்காத்தான் நேஷனலில் கையெழுத்திடலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் தெரிவித்தது.
எவ்வாறாயினும் இந்த மாத தொடக்கத்தில், சுயேச்சையான செனட்டர் மஇகாவில் மீண்டும் இணைய விரும்புவதாக விக்னேஸ்வரன் கூறியதாக செய்திகள் வெளியாகின. அது ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது என்றும், மீண்டும் கட்சியில் இணைவதற்கான விருப்பத்தை முன்னாள் உறுப்பினர்கள் எழுத்துமூலமான கோரிக்கையை மட்டுமே கையளித்தால் போதும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
ஆதாரத்தின்படி, சிவராஜ் மஇகாவுக்குத் திரும்புவதைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் சேரத் திட்டமிடவில்லை. இந்திய சமூகத்திற்கு மஇகா இன்னும் பொருத்தமானது என்பதை அவர் உணர்ந்தார். குறிப்பாக கொள்கைகளுக்கு வரும்போது, அதனால்தான் அவர் திரும்பி வர முடிவு செய்தார். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இளைஞரணி தலைவர் என்ற முறையில், தன் அனுபவத்தை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்தலாம். எப்எம்டி சிவராஜை அணுகி கருத்து கேட்டுள்ளது.










