கோரிக்கைகளை வலியுறுத்தி கிளாங் பள்ளத்தாக்கில் டாக்டர்கள் குழு வேலைநிறுத்தம் திட்டமிட்டுள்ளது

டாக்டர் - கோப்புப்படம்

மருத்துவ அதிகாரிகளின் நலன் தொடர்பான கோரிக்கைகளை அரசு ஏற்க வலியுறுத்தி கிளாங் பள்ளத்தாக்கில் மருத்துவர்கள் குழு வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. மென்மையான அணுகுமுறை பயனற்றது என்பதால் வேலைநிறுத்தம் செய்வதற்கான முடிவு அவசியம் என்றும், நாட்டின் சுகாதார அமைப்பு குறைந்த மன உறுதியால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய மிகவும் கடுமையான முறை தேவை என்றும் குழு கூறியதாக உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய கொடுப்பனவு மற்றும் சம்பள அதிகரிப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஹர்த்தால் டாக்டர் கான்ட்ராக் குழு – ஜூனியர் டாக்டர்களின் நலனுக்காக வாதிடும் குழு – முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தத்தில் இருந்து விலகி உள்ளது. இந்த குழு மருத்துவர்களுடனும் மலேசிய மருத்துவ சங்கத்துடனும் இந்த கோரிக்கைகளை முன்வைப்பதில் தங்களுடன் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று அதன் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஹம்மது யாசின் கூறினார். ஆனால் அழைப்பில் இருப்பவர்களுக்குப் பொருத்தமான ஒரு மணி நேரத்திற்கு (முந்தைய 9.16 ரிங்கிட்டில் இருந்து) 25 ரிங்கிட்டாக கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்பதனை ஒப்புக்கொள்கிறோம். கடந்த ஆண்டு, Mogok Doctor Malaysia என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மருத்துவர்கள் குழு நியாயமற்ற முறைமைகள் மற்றும் குறைந்த ஊதியத்தை எதிர்த்து மூன்று நாள் வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here