தடுப்பூசி போட்டு கொண்ட மலேசியர்கள் சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரப்படும்

கோவிட் -19 தடுப்பூசியின் முழு அளவைப் பெற்றவர்கள் சிங்கப்பூர் செல்ல அனுமதிக்க மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கையை முன்வைக்கும். தடுப்பூசி பெற்ற நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதைக் குறிக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமது தெரிவித்தார்.

தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்களுக்கான சான்றிதழ் கிடைப்பதால், எல்லைகள் சம்பந்தப்பட்ட ‘புதிய இயல்பில்’ அவர்களுக்கு ஒருவித நன்மைகள் வழங்கப்பட வேண்டும். தயக்கமின்றி, சிங்கப்பூருடனான எல்லையை மீண்டும் திறக்க சில நிலையான எஸ்ஓபி குறித்து மாநில அரசு அதன் பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு வழங்கும் என்று அவர் கூறினார்.

இன்று டேவான் முஃபாகத் ஜோகூரில் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் தனது முதல் டோஸ் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்பு அவர் இதைக் கூறினார். ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் தனிநபர்கள் பயணிக்க “தடுப்பூசி பாஸ்போர்ட்” பயன்படுத்த மாநில அரசு முன்மொழியுமா என்று அவரிடம் வினவப்பட்டது.

தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் முடிந்ததும் எல்லையை மீண்டும் திறப்பதும், சிங்கப்பூருடன் பசுமை பயண முயற்சியும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஹஸ்னி கூறினார்.

மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிட்சே, மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் அமன் ரபு மற்றும் மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர். வித்யானந்தன் ஆகியோர் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here