முஸ்லிம் அல்லாத வர்த்தக நிறுவனங்களை ஹலால் சான்றிதழைப் பெற கட்டாயப்படுத்த முடியாது- ஜாஹிட்

ஷா ஆலம்: முஸ்லிம் அல்லாத வர்த்தக நிறுவனங்களை ஹலால் சான்றிதழைப் பெற கட்டாயப்படுத்த முடியாது என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். ஜாஹிட் ஒருமுறை இஸ்லாமிய விவகார அமைச்சராக இருந்ததால் எழுப்பப்படும் கவலைகளை புரிந்து கொண்டதாக கூறினார். இஸ்லாம் கூறுவது என்னவென்றால் உங்கள் மதம் உங்களுக்காக, என் மதம் எனக்காக. மற்ற மதத்தினர் உங்களை மதிக்க வேண்டும் என்றால், நீங்கள் அவர்களின் மதத்தை மதிக்க வேண்டும் என்று இன்று மஇகா ஆண்டுப் பொதுக்குழுவில் பேசினார்.

உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஹலால் மற்றும் ஹராம் பற்றிய கேள்வி இந்த நாட்டில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சில முஸ்லீம் அல்லாத வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே தானாக முன்வந்து ஹலால் சான்றிதழை நாடுகின்றனர். ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அதை கட்டாயமாக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

அதனால்தான் பிரதமர் (அன்வார் இப்ராஹிம்) புதன்கிழமை கூட்டத்தின் போது முன்மொழிவின் நிலை குறித்த புதுப்பிப்பை வழங்க சமய விவகார அமைச்சர் நயிம் மொக்தாரை பணித்திருக்கிறார். கடந்த வாரம், இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் வழங்காத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்குவதற்கான முன்மொழிவை பரிசீலித்து வருவதாகவும், அது தற்போது தானாக முன்வந்து செய்யப்படுகிறது என்றும் நயிம் கூறினார்.

இதற்கு பதிலளித்த செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக், ஹலால் சான்றிதழை தன்னார்வ அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வணிக நடத்துபவர்களை கட்டாயப்படுத்துவதை விட சந்தை தேவையின் அடிப்படையில் முடிவு செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here