தொழிலதிபர் சோசிலாவதி கொலை: பத்மநாபன், தில்லையழகனின் மரண தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

புத்ராஜெயா: 14 ஆண்டுகளுக்கு முன்பு அழகுசாதனப் பொருட்களின் விற்பனையாளரும்  தொழிலதிபருமான சோசிலாவதி லாவியா மற்றும் அவரது மூன்று உதவியாளர்களைக் கொன்ற வழக்கில் இரண்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்ற மறுஆய்வுக் குழு இன்று உறுதி செய்தது. தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச், முன்னாள் வழக்கறிஞர் என்.பத்மநாபன் 55, டி.தில்லையழகன் 33, ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது சரியானது என்று கூறியது.

கொலைகளின் செயல் முறை விண்ணப்பதாரர்களின் தண்டனைகளுடன் தொடர்புடையது. அதை நாங்கள் மதிப்பாய்வு செய்யத் தயாராக இல்லை. வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், மறுஆய்வு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

சக குற்றவாளியான ஆர் காத்தவராயனும் தனது தண்டனையை மறுபரிசீலனை செய்ய விண்ணப்பித்தார். ஆனால் வழக்கறிஞர் லதீபா கோயா தனது வாடிக்கையாளர் விண்ணப்பத்தை வாபஸ் பெறுவதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். கட்டாய மரண தண்டனை ஒழிப்புச் சட்டம் 2023 இயற்றப்பட்டதைத் தொடர்ந்து மூவரும் தங்கள் மரண தண்டனைகளை சிறைத்தண்டனையாக மாற்ற முயன்றனர். இது  மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் உரிமையை நீதிபதிகளுக்கு வழங்குகிறது. மேலும் இந்த மனுக்களை நீதிபதிகள் நோர்டின் ஹசான் மற்றும் அபுபக்கர் ஜெய்ஸ் ஆகியோர் விசாரணை குழுவில் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here