உத்தரப் பிரதேச காற்று மாசுக்கு பாகிஸ்தான் தான் காரணம்.. குற்றம்சாட்டும் மாசு கட்டுப்பாடு வாரியம்

தலைநகர் டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கையை மீறி சென்றுள்ளது.

விவசாய கழிவுகளை எரிப்பது தற்போதைய காற்று மாசு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பஞ்சாபில் விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் டெல்லிக்கு மிக அருகில் உள்ள உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் சமீப நாட்களாகக் காற்றில் நச்சுத்தன்மை கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அளவு காற்று மாசு ஏற்படப் பாகிஸ்தான் தான் காரணம் என உ.பி. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பேசிய உ.பி. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல தலைவர் குப்தா, நொய்டா, காசியாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு ஏற்பட பாகிஸ்தானைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.

பாகிஸ்தான் விவசாயிகள் கழிவுகளை எரிப்பதாலேயே இந்த அளவு மாசு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். உ.பி. பகுதிகளில் ஏற்படும் காற்று மாசுக்கு 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தான் மீது உ.பி. அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here