சம்பளம் கிடையாது, ரூ. 20 லட்சம் டொனேஷன்.. ஜொமாட்டோ சிஇஓ பதிவால் சர்ச்சை

ஜொமாட்டோ தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் வெளியிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தலைமை பணியில் சேர்பவர்களுக்கு வித்தியாசமான நிபந்தணைகள் விதித்துள்ளார்.

அதன்படி இந்த பணியில் சேர்பவர்களுக்கு முதலாவது ஆண்டு முழுக்க சம்பளம் வழங்கப்படாது. மேலும், பணியில் சேர்பவர்கள் ஜொமாட்டோவின் லாப நோக்கற்ற அமைப்பான ஃபீடிங் இந்தியாவுக்கு ரூ. 20 லட்சம் நன்கொடை அளிக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து வெற்றிகரமான வேட்பாளர் தேர்வு செய்யும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 50 லட்சம் நன்கொடை வழங்குவதாக ஜொமாட்டோ தெரிவித்துள்ளது. இது புது வகையான கற்றல் வாய்ப்பு என ஜொமாட்டோ தெரிவித்துள்ளது. ஜொமாட்டோவின் இந்த அறிவிப்பு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

கோயல் அறிவித்து இருக்கும் இந்த தலைமை பதிவியில் பணியில் இணைவோர் ஜொமாட்டோவின் பல்வேறு பிராண்டுகளான ப்ளின்க்-இட், ஹைப்பர்-பியூர், டிஸ்ட்ரிக்ட் மற்றும் ஃபீடிங் இந்தியா உள்ளிட்டவைகளில் பணியாற்றுவர். கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டவர்கள், உறுதியான தகவல் பரிமாற்ற திறன் உள்ளிட்டவை இந்த பணியில் இணைபவர்கள் அவசியம் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here