கவுண்டர் செட்டிங்; இரு குடிநுழைவு அதிகாரிகள் மீது விரைவில் குற்றம் சாட்டப்படும்- MACC தலைமை ஆணையர்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) மூலம் வெளிநாட்டினரை நாட்டுக்குள் அழைத்து வரும் திட்டம் தொடர்பாக, கவுண்டரில் வியூகம் அமைத்து, அவர்களை நாட்டுக்குள் அனுமதித்தது தொடர்பாக இரண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் என்று
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(MACC) தெரிவித்துள்ளது.

இக்குற்றச்சாட்டுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் இரண்டு அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரும் நோக்கில் விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று, MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி கூறினார்.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த மாதம் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படலாம் அல்லது வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு ஒத்திவைக்கப்படலாம்” என்று நேற்று (டிசம்பர் 9) அனைத்துலக ஊழல் எதிர்ப்பு தினத்தின் நிறைவு விழாவில் அவர் கூறினார்.

முன்னதாக, குடிநுழைவுத் துறைக்குள் 11 முக்கிய பிரச்சனைகள் மற்றும் பலவீனங்களை MACC கண்டறிந்தது என்றும், இது கவுண்டர் செட்டிங் முறையின் மூலம் வெளிநாட்டினரை நாட்டுக்குள் அழைத்து வருவதற்கான வாய்ப்புகளை குறித்த மனிதக் கடத்தல் கும்பல்களுக்கு ஊக்கிவிப்பதாக இருந்தது என்றார்.

அசாமின் கூற்றுப்படி, முக்கிய பிரச்சினையானது நடவடிக்கைகளின் போது உள் கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதால், குடிவரவு அதிகாரிகளை சிண்டிகேட் முகவர்களின் அணுகுமுறைகளால் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here