FIFA கால்பந்து உலக கோப்பை:2034 தொடர் சவுதி அரேபியா நடத்தும்

ரியாத் : 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடத்தும் என்பதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் தொடரில் உலகக் கோப்பை முதன்மை இடத்தில் இருக்கிறது.
இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். 2022 FIFA உலகக் கோப்பை தொடரை கத்தார் வெற்றிகரமாக நடந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு பிபா உலகக்கோப்பை அமெரிக்கா கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகிறது.
இந்த சூழலில் 2030 மற்றும் 34 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரை யார் நடத்துவது என்பதை சுவிட்சர்லாந்தில் உள்ள ஸூரிச் நகரில் அறிவித்தார். அதன்படி 2030 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை ஆறு நாடுகள் இணைந்து நடத்தும் என்று அவர் அறிவித்தார்.
அதன்படி ஸ்பெயின், போர்ச்சுகல், மொராகோ, அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்தும் என்று அவர் அறிவித்தார். 1930 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை உருகுவேயில் நடைபெற்றதை நூறாண்டுகளில் கொண்டாட்டமாக இந்த உலகக் கோப்பை நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.
இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2034 ஆம் ஆண்டு பிபா கால்பந்து தொடரை சவுதி அரேபியா நடத்தும் என்று தலைவர் ஜியானி இன்பானிட்டோ அறிவித்தார். இது சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here