பொம்மைகள், உணவுப்பொருட்களை போல் வடிவமைக்கப்பட்ட 989 வேப் பறிமுதல்

ஜோகூர் பாரு: ஜோகூர் சுகாதாரத் துறை புதன் மற்றும் வியாழன் அன்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது பொம்மைகள் மற்றும் உணவாக பொருட்கள் போல் வடிவமைக்கப்பட்டிருந்த 34,158 ரிங்கிட் மதிப்புள்ள 989 வேப் அல்லது எலக்ட்ரானிக் சிகரெட் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. பொது சுகாதாரச் சட்டத்தின் (சட்டம் 852) புகைபிடிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 47ன் கீழ் 11 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் மோஹ்தர் புங்குட் தெரிவித்தார்.

ஜோகூரில், உள்ளூர் அதிகாரசபை (PBT) பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் வேப் தயாரிப்புகளை விற்பனை செய்வது உரிமம், வணிக வர்த்தகம் மற்றும் தொழில்துறை சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை (டிசம்பர் 21) அவர் ஒரு அறிக்கையில், ஜோகூரில், குறிப்பாக பொம்மைகள் அல்லது உணவுப் பொருட்களை இருக்கும் வேப் பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு வளாக உரிமையாளர்கள் மற்றும் வணிக நடத்துநர்களுக்கு சுகாதாரத் துறை கடுமையாக அறிவுறுத்துகிறது.

சட்டத்தின் கீழ் இதுபோன்ற அமலாக்க நடவடிக்கைகளை துறை தொடர்ந்து மேற்கொள்ளும்  என்று டாக்டர் மோஹ்தார் மேலும் கூறினார். இன்றுவரை 6,097 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு விதிமீறல்களுக்காக 1,021 குற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதிகளவில் பரவி வரும் புகைபிடிக்கும் பழக்கங்களின் எதிர்மறையான தாக்கத்தை சுகாதாரத் துறை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினரை இலக்காகக் கொண்ட நெறிமுறையற்ற விளம்பரங்களின் மீது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here