விடுதியிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு

சுக்காய்:

கேமாமன் மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியின் நீச்சல் குளத்தில் மூழ்கி பத்து வயது சிறுவன் ஒருவன் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டான்.

பாதிக்கப்பட்ட சிறுவன் அவனது 47 வயதான அவனது தந்தையால் குளத்தின் அடிப்பகுதியில் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்டான் என்று கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி வான் முகமட் வான் ஜாஃபர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பம் விடுமுறைக்காக நேற்று மாலை 3.30 மணியளவில் பகாங்கிலிருந்து திரெங்கானுவுக்கு வந்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here