இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு

ஆமதாபாத்:

குஜராத்தின் போர்பந்தரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் இந்த விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் பயிற்சியின் போது, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், மீட்பு பணி மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புபடையினர் நீண்ட நேரம் போராடி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். வழக்காமன பயிற்சியின் போது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து, கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொழில்நுட்பம் காரணம் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here