ஆசியான் முழுவதும் சாலை விபத்தில் ஆண்டுதோறும் 97,000 க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்: GRSP

விபத்து (கோப்புப்படம்)

ஆசியான் முழுவதும் சாலைப் பாதுகாப்பு ஒரு கடுமையான பிரச்சினையாகவே உள்ளது. ஆண்டுதோறும் 97,000க்கும் மேற்பட்ட இறப்புகளும் 3.4 மில்லியன் காயங்களும் பதிவாகின்றன என்று அனைத்துலக லாப நோக்கற்ற உலகளாவிய சாலை பாதுகாப்பு கூட்டாண்மை (GRSP) ஆசிய-பசிபிக் மேலாளர் பிரட் ஹர்மன் கூறுகிறார்.

இந்தப் பிரச்சினை குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் மனித இழப்புகளையும் கொண்டுள்ளது என்றும் சாலை போக்குவரத்து விபத்துகளால் பிராந்தியம் ஆண்டுதோறும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 3.8% இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். மலேசியா ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளது என்றும் ஆண்டுதோறும் 4,600 க்கும் மேற்பட்ட இறப்புகளும் சுமார் 212,000 காயங்களும் பதிவாகியுள்ளன என்றும் ஹர்மன் கூறினார்.

எனவே, இந்த ஆண்டு ஆசியான் தலைமையை மலேசியா பொறுப்பேற்றுள்ளதால், குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் போக்குவரத்து அளவு அதிகரிக்கும் நீண்ட விடுமுறை நாட்கள் போன்ற அதிக ஆபத்துள்ள காலங்களில், சாலைப் பாதுகாப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவசரம் இதற்கு முன்பு இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

ஆசியானின் தலைவராக, மலேசியா சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அனைத்து முயற்சிகளை வழிநடத்தும் தனித்துவமான நிலையில் உள்ளது. வரும் வாரங்களில், ஆசியான் தலைவர்கள் சாலைப் போக்குவரத்து இறப்புகள் மற்றும் காயங்களைக் குறைப்பதற்கான உத்திகளைப் பற்றி விவாதிக்க அமைச்சர்கள் சாலைப் பாதுகாப்பு: ஆசியான் முழுவதும் உயிர்களைப் பாதுகாத்தல்  ஒரு முக்கியமான  மாநாட்டிற்கு ஒன்றுகூடுவார்கள் என்று பெர்னாமா டிவியின் பெர்னாமா வேர்ல்ட் நிகழ்ச்சியில் விருந்தினராகப் பங்கேற்றபோது அவர் கூறினார்.

ஹர்மனின் கூற்றுப்படி, பாதுகாப்பான சாலை உள்கட்டமைப்பு, வேகக் குறைப்பு மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை மேம்படுத்துதல் போன்ற உயிர்காக்கும் தலையீடுகளுக்கு வாதிடுவதே இந்த மாநாட்டின் முக்கிய கவனம். கூடுதலாக, மலேசியாவில் சாலை இறப்புகளில் சுமார் 70% மோட்டார் சைக்கிள்கள் ஈடுபட்டுள்ளதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் முயற்சிகளின் அவசியத்தை ஹர்மன் வலியுறுத்தினார்.

மோட்டார் சைக்கிள்களுக்கான ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்ஸ் (ABS) போன்ற மேம்பட்ட வாகனப் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவது மலேசியாவிலும் ஆசியானிலும் உயிர்களைக் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகன பட்டை அணியாதது, தலைகவசம்  பயன்படுத்தாமல் இருப்பது போன்ற முக்கிய ஆபத்து காரணிகளைக் கையாள்வதைத் தவிர, குறிப்பாக பள்ளி  வளாகங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வேக வரம்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஹர்மன் கூறினார்.

நெட்வொர்க் முழுவதும் சராசரி வேகத்தை மணிக்கு 1 கிமீ குறைப்பதன் மூலம் இறப்புகளில் 4% முதல் 5% வரை குறைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் பல அனைத்துலக ஆராய்ச்சிகள் உள்ளன. எனவே, மணிக்கு 5 கிமீ வேகத்தைக் குறைக்க முடிந்தால் சுமார் 30% குறைப்பை அடைய முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார். குறைந்த வேகம் நெரிசலைக் குறைக்கும். மாசுபாட்டைக் குறைக்கும் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்புடையதாக  இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here