பிரதமரின் பத்துமலை வருகை இந்திய சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது பத்துமலை தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா தெரிவித்தார். பிரதமர் பத்துமலை திருத்தலத்திற்குள் நுழைந்தவுடனேயே என் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். நான் அவரிடம் பத்துமலை வளாகத்தில் சில மேம்பாட்டுப் பணிகளை தொடங்கவிருப்பதாக கூறினேன். அவர் உடனேயே சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரை தேடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்குமாறு பணித்தார்.
இவ்வேளையில் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன், மஇகாவின் தேசியத்தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத்தலைருமான டத்தோஶ்ரீ சரவணன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டார்.










