ஷா ஆலம்:
நேற்று வியாழக்கிழமை (பிப். 13) கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (MPKS) தலைமையிலான ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, இங்கு அருகிலுள்ள புன்சாக் ஆலம், ஆலம் ஜெயா வணிக மையத்தில் வெளிநாட்டினரால் நடத்தப்படும் நான்கு வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டது.
காலை 10 மணிக்கு தொடங்கிய நான்கு மணி நேர நடவடிக்கையில், இரண்டு உணவகங்கள் மற்றும் இரண்டு கார் கழுவும் மையங்கள் மூடப்பட்டன என்று, MPKS இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை 35 பணியாளர்களை உள்ளடக்கியது என்றும் மலேசிய நிறுவனங்களின் ஆணையம் (SSM) மற்றும் ராயல் மலேசியன் சுங்கத் துறை (JKDM) மத்திய மண்டல பிரிவு II (சிலாங்கூர்) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





















