பெங்களூரில் 150 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்ததில் 24 வயது ஆடவர் உயிரிழந்தார். மூவர் காயமுற்றனர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தேர் ஊர்வலம் இடம் பெற்றது.
பக்தர்கள் தேரை இழுக்கும்போது அந்த அசம்பாவிதம் நேர்ந்தது. காயமுற்ற மூவரில் 16 வயதுப் பெண்ணும் அடங்குவார். அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இவ்வாண்டும் 2 தேர்கள் இழுக்கப்பட்டன. ஒரு தேர் சிக்கா நாகமங்கலா எனும் பகுதியில் விழுந்தது. அதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தன.
இரண்டாவது தேர் கனத்த மழையினாலும் பலத்த காற்றினாலும் ராயசண்டரா எனும் பகுதியில் சாய்ந்தது.









