பட்டாசு விற்பனை கடையில் தீ: நான்கு பேர் காயம்

சபாக் பெர்னாமின் கம்போங் பத்துவில் உள்ள பட்டாசு விற்பனை செய்யும் கடையில் நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் முக்தார், அதிகாலை 1.08 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகக் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது, ஆனால் அவர்கள் வருவதற்குள், தீ ஏற்கனவே அணைக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கு கால்கள் மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here