ஜார்ஜ் டவுன் அடுக்குமாடி குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த ஆடவர்

பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து விழுந்து 27 வயது இளைஞர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். முதற்கட்ட விசாரணையில் எந்த விதமான வன்முறை சம்பவங்களும் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று திமூர் லாட் துணை காவல்துறைத் தலைவர் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார். அந்த நபர் கேட் லெபு மெக்காலமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்ட நிலையில், உடல் பினாங்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக லீ கூறினார். சம்பவத்தின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பொதுமக்களுக்கு பரப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here