பட்டர்வொர்த் அவுட்டர் ரிங் ரோட்டில் (BORR) போக்குவரத்துக்கு எதிராக ஆபத்தான முறையில் பள்ளி வேனை ஓட்டியதற்காக முதியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் கூறுகையில் இந்த சம்பவத்தின் போது, அந்தப் பகுதி வழியாகச் சென்ற ஒரு போலீஸ் ரோந்து வாகனம் 70 வயது மதிக்கத்தக்க அந்த நபரை தடுத்து நிறுத்தியது.
முதியவர் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டிச் சென்று தவறான திருப்பத்தை எடுத்ததாகக் கூறினார். விபத்துகளோ அல்லது அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை. தனியாக வாகனம் ஓட்டிச் சென்ற நபர், 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து ஒரு நிமிடம், 13 வினாடிகள் கொண்ட வீடியோ முந்தைய நாளில் வைரலாகியது.









