லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வருகின்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருபக்கம் லியோனல் மெஸ்ஸி மறுபக்கம் என கால்பந்து உலகின் GOAT ஆக இருவரும் திகழ்ந்து வருகின்றனர். என்னதான் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்கள் இருவரும் மோதிக்கொண்டு இருந்தாலும் இருவரும் தனி தனியே சிறப்பான வீரர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இருவரும் சரிசமமான வீரர்கள். பிறகு ஏன் ரசிகர்கள் இப்படி மோதிக்கொள்கின்றனர் என்பது பொதுவான கால்பந்து ரசிகர்களின் கருத்து. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கையில் லியோனல் மெஸ்ஸி தான் ஏன் கால்பந்து உலகின் GOAT என மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கின்றார். லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி அணி எதிர்பார்க்காத கம்பேக் கொடுத்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
ஒருகட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 2 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. எனவே கண்டிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் அணி தான் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெஸ்ஸி இன்டர் மியாமி அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தார். ஒரு ஜாம்பவான் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார் மெஸ்ஸி. ஆட்டம் கையைவிட்டு போய்விட்டதோ என இன்டர் மியாமி ரசிகர்கள் நினைத்த நிலையில் 35 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து நம்பிக்கை கொடுத்தார் மெஸ்ஸி.
அதன் பிறகு தான் இன்டர் மியாமி அணி உத்வேகம் பெற்றது. அதன் பிறகு ஆட்டம் அப்படியே இன்டர் மியாமி அணி பக்கம் சென்றது. அதுவரை தத்தளித்த லியோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி ஆட்டத்தை தன் பக்கம் கொண்டு வந்தது. இறுதியில் இன்டர் மியாமி அணி லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை 3 -2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் இன்டர் மியாமி அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. மேலும் இன்டர் மியாமி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்ததற்கு மிக முக்கிய காரணமாக மீண்டும் லியோனல் மெஸ்ஸி அமைந்துள்ளார். அவரின் விடாப்பிடியான மனநிலை தான் இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி கம்பேக் கொடுக்க காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம்.








