ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்

சென்னை,

இந்திய ஓபன் தடகளம் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இதன்படி, சென்னையில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டி ஒன்றில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற கிஷோர் ஜெனாவை பின்னுக்கு தள்ளி, யஷ் வீர் சிங் வெற்றி பெற்றார்.

எனினும், 2025-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான ஆடவர் ஈட்டி எறிதலில், இந்திய தடகள கூட்டமைப்பு வைத்துள்ள நுழைவுக்கான 75.36 மீட்டர் என்ற அளவை விட இருவரின் தூரமும் அதிகம் ஆகும்.

 

நடப்பு ஆண்டில் கொரிய குடியரசின் குமி பகுதியில் வருகிற மே மாதம் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் இந்திய ஓபன் தடகள போட்டிகள் நாடு முழுவதும் நடைபெறும். அடுத்த போட்டி வருகிற 21-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here