அமெரிக்கா வாஷிங்டனில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், தனது மனைவியையும் மகன் ஒருவரையும் சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி ஹர்ஷ்வர்தன் தனது வீட்டில் மனைவி சுவேதா மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு மகன் வெளியே சென்றிருந்த நிலையில் அவன் உயிர் தப்பினான்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு இந்திய தொழிலதிபர் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









