கோழி முட்டைகளுக்கான உதவித் தொகை கட்டம் கட்டமாக நிறுத்தப்படவிருப்பதால், கோழி முட்டைகளின் விநியோகம் மற்றும் விற்பனையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மடானி அரசாங்கத்தின் பேச்சாரளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
கோழி முட்டைகளின் கையிருப்பு மற்றும் உற்பத்தி தற்போது நிலையாக இருப்பதை கருத்தில் கொண்டு, உதவித் தொகையை படிப்படியாகக் குறைக்கும் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் முடிவு நியாயமானது என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி தொடங்கி முட்டைகளுக்கான உதவித் தொகை முற்றாக நிறுத்தப்படுவதற்கு முன்னர், ஒரு முட்டைக்கு அரசாங்கம் வழங்கி வந்த 10 சென் உதவித் தொகை இன்று தொடங்கி 5 சென்னுக்கு குறைக்கப்படும்.