வீட்டின் பின்னால் உள்ள புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு

குவாந்தான்: ட்ரியாங்கின் ஃபெல்டா புக்கிட் மெண்டியில் ஒரு வீட்டின் பின்னால் உள்ள  புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர்,  மனித உடல் என நம்பப்படும் எலும்புகளை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். 51 வயதான நபர் மாலை 4 மணியளவில் அப்பகுதியில் களைக்கொல்லியை தெளிக்கும் போது தற்செயலாக கண்டுபிடிப்பைக் கண்டதாக பெரா காவல்துறைத் தலைவர் சுல்கிஃப்ளி நசீர் தெரிவித்தார்.

அந்த நபர் பின்னர் காவல்துறையில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் புதரில் ஒரு மனித எலும்புக்கூடு, இறந்தவருக்குச் சொந்தமானது என்று நம்பப்படும்சட்டை, கால்சட்டை ஜாக்கெட் போன்ற ஆடைப் பொருட்கள்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 48 வயது நபர் தொடர்பாக காவல்துறைக்கு காணாமல் போனதாக புகார் கிடைத்ததாக சுல்கிஃப்ளி கூறினார். கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் காணாமல் போன நபர் வழக்குடன் தொடர்புடையதா என்பதை அறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.

இதுவரை, காணாமல் போன நபரின் குடும்ப உறுப்பினர்கள் அந்த ஆடைகள் அவருடையது என அடையாளம் கண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனைக்காக எலும்புக்கூடு எச்சங்கள் பெரா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here