நியூ சிலாந்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையால் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியது.
மேலும் மலேசியர்கள் முழு விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் அங்கு உதவித் தேவைப்படும் மலேசியர்கள் உயர் ஆணையத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதனால் பாதுகாப்புக் கருதி பள்ளிகளும் வணிகத் தளங்களும் மூடப்பட்ட வேளை, ஏராளமான
விமானப் பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டன. எனினும், நிலவரம் சற்று மேம்பட்டதால் உயர்மட்ட வானிலை எச்சரிக்கை நேற்று மீட்டுக் கொள்ளப்பட்டது.