கோலாலம்பூர்:
நேற்று மாலை 5 மணிக்கு அரசு மலேசியன் விமானப்படைக்கு (RMAF) சொந்தமான விமானம், ஓடுபாதையில் சறுக்கியத்தைத் தொடர்ந்து, சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலைய (AOR) ஓடுபாதை தற்போது மூடப்பட்டுள்ளது.
அரசு மலேசியன் விமானப்படை (RMAF) விமானத்தை அகற்றுவதற்கும், ஓடுபாதை சுத்தம் செய்யும் பணிகளுக்குமாக குறித்த ஓடுபாதை மூடப்படுவதாக விமான நிலையம் வெளியிட்டுள்ள ஊர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரம் “விமானப்படை வீரர்களுக்கும் (NOTAM) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,
மேலும் ஓடுபாதை மூடல் இன்றிரவு 10.30 மணி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூடலின் போது, AOR இல் உள்ள அனைத்து விமான நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்.
“ஹஜ் பயணம் செய்பவர்கள் உட்பட பயணிகள் சமீபத்திய விமானத் தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களிடமோ அல்லது லெம்பாகா தபுங் ஹாஜியிடமோ சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டனர் ” என்பது குறிப்பிடத்தக்கது.