கோலாலம்பூர் :
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் MACC யிடம் தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வருகிறார்.
ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அவர் தொடர் வாக்குமூலம் அளித்து வருகிறார், அதற்கமைவாக இன்று புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு வந்தார்.
நாட்டின் ஒன்பதாவது பிரதமரான இஸ்மாயில் சபரி யாக்கோப்பை ஏற்றிச் சென்ற வாகனம், காலை 10.54 மணிக்கு வந்தது.
ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை அவர் பிரதமராக இருந்த காலத்தில் மலேசியா குடும்பத் திட்டத்தின் விளம்பரம், விளம்பரத்திற்காக நிதி செலவழித்தல், கையகப்படுத்துதல் தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த வழக்கு MACC சட்டம் 2009 மற்றும் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் சட்டம் 2001 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.