தெலுக் இந்தானில் இன்று காலை பெடரல் ரிசர்வ் யூனிட் (FRU) லோரி மோதிய விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று ஒரு பேஸ்புக் பதிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விபத்தில் உயிரிழந்த அனைத்து FRU பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், அனைத்து விஷயங்களும் எளிதாகவும் இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார். ஜாலான் சிகஸ்-சுங்கை லாம்பாமில் போலீஸ் பிரிவினர் சென்ற வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற லோரி மோதிய விபத்தில் ஒன்பது FRU பணியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.









