ஆந்திராவில் பொம்மை போல காட்சியளிக்கும் சீன கோழி

ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் இர்பான். இவர் பொம்மை போல காட்சியளிக்கும் கோழி ஒன்றை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.

இந்த கோழி பட்டுப் போன்ற இறகுகளும் உறுதியான உடலும் கொண்ட பொம்மையைப் போல தோற்றமளிக்கிறது.இந்தக் கோழி சீனப் பாண்டம் என்று அழைக்கப்படுகிறது. தலை முதல் கால் வரை மென்மையான வெள்ளை இறகுகள் உள்ளது.

இந்த கோழியை பார்க்க பலர் தனது வீட்டிற்கு வருவதாக இர்பான் கூறினார். அவற்றின் இறைச்சியை சாப்பிடலாம். ஆனால் பலர் அவற்றை வளர்க்க விரும்புகிறார்கள்.அதிக வெப்பத்தை தாங்க முடியாது. வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் உயர்ந்தால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என இர்பான் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here