ஆசியான் கூட்டமைப்பின் முக்கிய ஈடுபாட்டை பேணுவதில் மலேசியா உறுதி பூண்டுள்ளது: அன்வார்

ஆசியான் கூட்டமைப்பு சீனாவுடன் அதிகரித்து வரும் நெருக்கமான உறவுகள் குறித்த கருத்துக்களுக்கு மத்தியில், அனைத்து பெரிய சக்திகளுடனும் சமநிலையான, ஆக்கபூர்வமான ஈடுபாட்டைப் பேணுவதில் உறுதியாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

பிராந்திய கூட்டமைப்பு கொள்கையின் அடிப்படையில் அனைத்து பெரிய சக்திகளுடனும் சமநிலையான ஈடுபாட்டிற்கு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். நீண்ட காலமாக இந்தக் கருத்து இருந்து வருகிறது. அதனால்தான், ஆசியான் தலைவர்களுக்கு நான் அளித்த எனது  அறிக்கையில், ஜனவரி மாதம் லங்காவியில் நடந்த முதல் சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சர்களின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஆசியான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடன் தொடர்ந்து ஈடுபடும் என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்ற 46ஆவது உச்சநிலை மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆசியான் சீனாவுடனான ஒத்துழைப்பு விரிவடைவது மூலோபாய சார்புக்கு இடமளிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அன்வர் இவ்வாறு கூறினார். 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு  ஆசியான் 2025 மலேசிய தலைமையின் கீழ் “உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

கடந்த இரண்டு நாட்களாக KLCC-யில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் ASEAN தலைவர்கள், முக்கிய உரையாலில் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் இரண்டு உயர்மட்ட கூட்டங்கள், அதாவது 2ஆவது ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (GCC) உச்சநிலை மாநாடு, ASEAN-GCC-சீனா உச்சநிலை மாநாடு ஆகியவை அடங்கும். இவை பிராந்திய மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கியமான தளங்களை வழங்கின.

சமீபத்திய ASEAN-GCC-சீனா உச்சநிலை மாநாட்டை பெய்ஜிங் சார்பு ஆதரவின் சான்றாகக் கருதக்கூடாது என்று அன்வார் கூறினார். ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் முன்மொழிந்தபடி, அமெரிக்க-ஆசியான் உச்சநிலை மாநாட்டைத் தொடர ஆசியான் உடன்பாட்டை வெளிப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளதாக பிரதமர் கூறினார்.

இது எந்த வகையிலும் பாரபட்சமானது என்று நான் நினைக்கவில்லை. நாளை எனக்கு ஜனாதிபதி டிரம்பிடமிருந்து ‘ஆம்’ என்று ஒரு கடிதம் வந்தால், நாங்கள் ஒரு உச்சநிலை மாநாட்டை நடத்துவோம் (ஆனால்) ஜூன் மாதத்தில் அல்ல, அது மிக விரைவில், ஆனால் அடுத்த சில மாதங்களில், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.

ஆசியானின் நிலைப்பாடு மக்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நிரலில் வேரூன்றியுள்ளது என்றும், இது பொருளாதார, வர்த்தகம், முதலீட்டு உறவுகள் மூலம் அதன் மக்களின் நலன், நல்வாழ்விற்கு முன்னுரிமைப்படுத்துகிறது என்றும் அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.

எனவே சீனாவுடன் இணைந்து பணியாற்றுவது என்றால், ஆம், நாங்கள் செய்வோம். அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியம் என்று அவர் கூறினார். (எந்த நாட்டுடனும்) தொடர்ந்து ஈடுபடுவதும், நல்ல உறவைக் கொண்டிருப்பதும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here