நிக் நஸ்மி: நாங்கள் ராஜினாமா செய்தோம், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம்

­தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் இன்று தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகிய போதிலும், பிகேஆர் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறினார். X இல் வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான செய்தியில், டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லியின் சார்பாக நிக் நஸ்மி பேசியதாகத் தெரிகிறது. நாங்கள் ராஜினாமா செய்தோம். கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்று நிக் நஸ்மி தெரிவித்தார்.

பிகேஆர் துணைத் தலைவர் போட்டியில் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வியடைந்ததன் அர்த்தம், அரசாங்கத்தில் கட்சியின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த தனக்கு இனி ஆணை இல்லை என்று கூறி, ரஃபிஸி நேற்று தனது பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சமீபத்திய கட்சித் தேர்தல்களில் பிகேஆர் உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிய நிக் நஸ்மி, சிறிது நேரத்திலேயே இதே போன்ற காரணங்களைக் கூறி தனது ராஜினாமாவை அறிவித்தார்.

பிரதமர் அன்வாருக்கு அளித்த ஆதரவை 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வதாக வாட்ஸ்அப்பில் பரவி வருவதாகக் கூறியது. பட்டியலில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் பிகேஆர் துணைத் தலைவர் சாங் லி காங், இந்தக் கூற்றை மறுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here