புத்ரா ஜெயா: முன்னாள் ஆய்வாளரும் உதவியாளருமான ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானதாக தாக்கல் செய்த சிவில் வழக்கில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மனுவிற்கு இடைக்கால தற்காலிக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முழுமையான தடை உத்தரவு மனுவுக்கான விசாரணை ஜூலை 21 அன்று நடைபெற உள்ளது. இந்த இடைக்கால தடை அந்த விசாரணை நாள் வரை செல்லும். நீதிபதி சுபாங் லியான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அன்வார் தனது மனுவிற்கு பிரத்யேக சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தது.
1964 ஆம் ஆண்டின் நீதிமன்ற அதிகார சட்டத்தின் பிரிவு 44ன் கீழ், இடைக்கால உத்தரவு வழங்க நீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது என்று நாங்கள் மதிப்பீடு செய்கிறோம். இதனால்தான் மேல்முறையீட்டாளரின் (அன்வார்) தடை மனுவின் நிலைத்தன்மையை காக்க இந்த இடைக்கால உத்தரவை வழங்குகிறோம் என நீதிபதி சுபாங் கூறினார். இந்த மனுவை பரிசீலித்த மற்ற நீதிபதிகள் ஃபைஸா ஜமாலுதின், அகமட் ஃபைரூஸ் ஸைனுல் அபிடின் ஆவார்.
இந்த வழக்கின் விசாரணை ஜூன் 16 முதல் ஜூன் 25 வரை ஏழு நாட்கள் நடைபெறவிருந்தது. இந்த வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸைன் முன்னிலையில் நடைபெறவிருந்தது. இந்த வழக்கு, அன்வார் நவம்பர் 24, 2022 அன்று பிரதமராக பதவியேற்கும் முன்னர் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை மையமாகக் கொண்டது.
இந்த வழக்கில் எழுந்துள்ள எட்டு சட்டக் கேள்விகளை கூட்டுத் தீர்மானத்திற்காகச் செல்லும் மனுவை நீதிபதி ரோஸ் மாவார் நிராகரித்ததை எதிர்த்து, அன்வார் மேல்முறையீடு செய்துள்ளார். அவர், அந்த மேல்முறையீட்டு மனு முடிவுக்கு வரும் வரை அனைத்து வழக்குமுறைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.





















